Sunday, November 20, 2011

பஸ் கட்டணம் உயர்வு,பால்விலை உயர்வு.விஜயகாந்த் எதிர்ப்பு ஏன்?.

ஜெயலலிதா துக்ளக் ஆட்சி நடத்துகிறாராம்!! அன்று ஆமாம் சாமி போட்ட இந்த விஜயகாந்த் இன்று உள்ளாட்சியில் தோல்வி மண்ணை கவ்வ வைத்ததால் போராட்டம் நடத்த போகிறாராம் இது பச்சோந்தியான வேலை இல்லையா,  

ஆசிரியர்கள் நேரத்திற்கு வந்து வேலை பார்!! உன்னுடைய வருகை பதிவை ஒழுங்காக  தாருங்கள் என்றால் துக்ளக் ஆட்சியா!!

தி.நகர் வரம்பு மீறி கட்டிய வணிக கட்டிடங்களை சீல் வைத்தால் துக்ளக் ஆட்சியா

மதுரை கோவிலை சுற்றி உள்ள கட்டிடங்களை சீல் வைத்தால் துக்ளக் ஆட்சியா

தனியாருக்கு கொடுக்கும் எழுநூறு கோடி ரூபாய் தடுத்து அதனை அரசு மருத்துவமனை சரி படுத்தி இருக்கும் சேவைகளை நவீன படுத்துவது துக்ளக் ஆட்சியா!!

பலான படங்கள் கூட வரி விலக்கு என்று அனுபவித்ததை தடை செய்தது துக்ளக் ஆட்சியா

நில விற்ப்பனையில் குறைந்த விலை காட்டி ஸ்டாம்ப் வரி குறைவாக அரசிற்கு கட்டியதை தடுத்தது துக்ளக் ஆட்சியா

வாரம் வாரம் அரசிற்கு சொந்தமான வள்ளுவர் கோட்டத்தில் பாராட்டு விழா நடத்தாமல் இருப்பது துக்ளக் ஆட்சியா  

இலவச பொருட்களை அரசு செலவு செய்து ஒவ்வொரு கவுன்சிலரும் கொடுத்தது தடுத்தது துக்ளக் ஆட்சியா!!

திமுக ஆட்சியில் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக இருநூறு சதவிதம் ஏற்றினார்கள்!! அதனை மக்களுக்கு தெரியுமாறு வெளிப்படையாக ஐம்பது சதவிதம் ஏற்றினால் துகளக் ஆட்சியா!!

அரிசி கடத்தலை ஓரளவிற்கு தடுத்து!! லாரி டிரைவர் பிடித்து போட்டு கணக்கு காட்டியதை மாற்றி லாரி உரிமையாளர் மீதும் குண்டாஸ் சட்டம் போட்டது துக்ளக் ஆட்சியா!!

மணல்கட்த்தல் மாபியா வை தடுத்து குண்டாஸ் சட்டம் போட்டது துக்ளக் ஆட்சியா!!

கந்து வட்டி வாங்குவோர் மீது குண்டாஸ் சட்டத்தை புதுப்பித்தது துக்ளக் ஆட்சியா!!

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயபடுதுவது துக்ளக் ஆட்சியா!!

ஏழை மக்கள் பிறர் கை ஏந்தி வாழும் நிலை மாற வேண்டும் என்ற ஓர் அற்புதமான எண்ணத்தில் இலவச மாடு , ஆடு திட்டம் துக்ளக் ஆட்சியா!!

எத்தனையோ ஏழை மாணவர்கள் படிப்பினை முடித்து தொழில் சார்ந்த அனுபவத்தை படிக்காமல் வேலைக்காகக் திரிந்தவர்களின் நிலை மாற்ற இலவச கணினி கொடுத்தது துக்ளக் ஆட்சியா!!

கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் மட்டும் போன கேபிள் வருமானத்தை அரசிற்கு திருப்பியது துக்ளக் ஆட்சியா

முதல்வன் படத்தில் இது மாதிரி காட்சி வந்தால் ரசித்து இது மாதிரி நடக்காதா என்று சொல்கிறோம்!!

இந்தியன் படத்தில் வந்தால்!! நடக்காதா என்று ஏங்குகிறோம்!!

ஆனால் நிஜத்தில் அது நடக்கிறது!