Saturday, December 31, 2011

சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கடுமையான எச்சரிக்கை.

செய்த தருமம் தலை காக்கும். 
தக்க சமயத்தில் உயிர் காக்கும். 
கூட இருந்தே குழி பறித்தாலும்  . 
என்ற பாடல் வரிகளுக்கேற்ப 
இன்று நாடு  காக்கப்பட்டிருக்கிறது.

சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  கடுமையாக எச்சரிக்கை விடுத்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோடரி கதையைக் கூறி, தொண்டர்களுக்கு விளக்கம் அளித்தார்.


பொதுக்குழுவின் இறுதியில் அவர் பேசியதாவது: 

ஒரு முறை, மரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஆண்டவனிடம் மனு கொடுத்தனவாம். அதில், "இறைவா! எங்களை இரக்கமின்றி வெட்டிச் சாய்க்கும் கோடரிகளை இனி நீ தயாரிக்க அனுமதிக்காதே' என்றனவாம். உடனே ஆண்டவன் சொன்னாராம். "கோடரி தயாரிப்பதை நிறுத்தச் சொல்வதற்கு முன், நீங்கள், அந்தக் கோடரிகளுக்கு கைப்பிடி ஆவதை நிறுத்துங்கள். உங்களிடமிருந்து தானே கோடரிக்கு கைப்பிடிகள் தயாரிக்கப்படுகின்றன' என்றபோது, தலைகுனிந்து நின்றனவாம் மரங்கள். ஆக, தீதும் நன்றும் பிறர் தர வராது. 

அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கின்றனர்; குற்றம் புரிகின்றனர். அதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்படும் போது, 

ஒரு சிலர், "சரி! இனி நமக்கு அரசியல் வேண்டாம் என, சிலர் முடிவெடுப்பர். இன்னும் சிலர், "வேறு கட்சியில் போய் சேர்ந்து விடலாம்' என முடிவெடுப்பர். அதில் தவறேதுமில்லை. வாழ்க்கை இருக்கிற வரை வாழ்ந்தாக வேண்டும்.


இன்னும் சிலர் இருக்கின்றனர். தவறு செய்து, துரோகம் புரிந்து, கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச்சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு,

"நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம்; மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால், நாளை, நாங்கள் உள்ளே சென்ற பிறகு, உங்களை பழி வாங்கி விடுவோம். ஆகவே, எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்' என்று சொல்பவர்களும் உண்டு. 

அப்படி, தலைமை மீது சந்தேகம் வரும் அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு, நம்பி, அதன்படி செயல்படும் கட்சியினருக்கும் மன்னிப்பு கிடையாது. இவ்வாறு கடுமையாக எச்சரிக்கை விடுத்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா,   பேசினார்.

தொண்டர்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாகவும், மக்களிடம் நம்பிக்கை பெற கூடியதாகவும்  சந்தேகங்களை  போக்கியிருக்கிறது 

 புத்தாண்டு-2012 வாழ்த்துக்கள்.

Saturday, December 24, 2011

இதய தெய்வம் M.G.R. 24 ம் ஆண்டு நினைவு அஞ்சலி.

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. 

அவரது 24-வது ஆண்டு நினைவு நாள் 24.12.11


இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணம் ஆகும்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும். 
                                                         M.G.R.

Monday, December 19, 2011

ஒரு தவறு செய்தால் அது சசி&கோ என்றாலும் விடமாட்டேன்.

அம்மா அவர்கள் மிக மிகச் சரியான முடிவு எடுத்து இருக்கின்றார்கள். தாமதம் இல்லாமல் எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் அம்மாவுக்கு நிகர் அம்மாதான். இதன் மூலம் அ.தி. மு. கவை பிடித்து இருந்த சனி விலகியது என்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் இனி அ.தி.மு.க மிக்கப் பலம் வாய்ந்த தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்த தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். கட்சியில் எத்தகைய உயர் மட்டத்தில் இருந்தாலும், தனக்கோ கட்சிக்கோ அவர்களால் இடர் வரும் என்று தெரிந்தால் கட்சியில் இருந்தே விலக்க தயங்க மாட்டார்.நல்ல துணிச்சலான முடிவு ஆனால் மிகவும் தாமதமாக எடுத்த முடிவு

இவர்கள்தான்(சசி&கோ) கட்சிக்கு கெட்ட பெயர்கள் வர காரணமாக இருந்தவர்கள். இப்போதுதான் ADMK உண்மையான MGR அவர்களின் உண்மையான கட்சி, அவரது மறைவு தினத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல செய்தி என்று சொல்லலாம், துணிந்து துணிவோடு மக்களுக்கு நல்லது யார் செய்தாலும், அது கடவுளுக்கு செய்யும் காரியமாகும் ,

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.என்ற புரட்சித்தலைவர் பாடல் வரிக்கு சரியான சாட்சி இந்த சசி&கோ நீக்கம்.