Monday, October 24, 2011

பாசிச, ஜனநாயக விரோதப் போக்கு: மத்திய அரசு மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சரமாரி குற்றச்சாட்டு


காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளிடம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

இதேபோல் பல்வேறு குற்றச்சாட்டுகளை பட்டியலிட்ட அவர்
, மாநில அரசின் நிர்வாகத்தில் அதிக அளவில் குறுக்கிடுவதின் மூலம் அதனை ஒரு நகராட்சி அளவுக்கு கீழே தள்ள மத்திய அரசு முயல்கிறது என்றும் சாடினார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய
வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். இதில், தமிழக முதல்வரின் உரையை வாசித்தார். அதன் விவரம்:

'12-
வது ஐந்தாண்டு திட்டத்தை விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக இந்த 56-வது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக நான் அறிகிறேன். 

இந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் ஒரு சடங்குக்காக
கூட்டப்படுகிறதேயன்றி இதனால் எந்த பலனும் ஏற்படுவதில்லை என்ற எனது கருத்தை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளை பழிவாங்குவதற்கு மத்திய அரசு தீர்மானித்திருக்கிறதோ என்று கருத வேண்டியிருக்கிறது. 

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ளவர்களைப்போல காங்கிரஸ் அல்லாத மாநில அரசு
ஆளும் மாநிலங்களில் உள்ள மக்களும் இந்திய குடிமக்கள்தான் என்பதை மத்திய அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

மாநிலத்தின் உண்மையான தேவைகளை கூட மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. சிறப்பு
நிதி வழங்க வேண்டும் என்று பலமுறை தமிழக அரசு கேட்டுக்கொண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆளும் மேற்கு வங்கத்துக்கு சிறப்பு சலுகை திட்டமே அளிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் மீது மத்திய அரசு கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது.
அண்மைக்காலமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் பாசிச மற்றும் ஜனநாயக விரோதப் போக்குடன் உள்ளது.

வகுப்பு கலவரம் தடுப்பு என்ற போர்வையில் மத்திய அரசு கொண்டு வர
உத்தேசித்துள்ள திட்டம் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எந்த நேரத்திலும் மாநில அரசை பதவி நீக்கம் செய்யலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது.

மாநில அரசுகளின் முக்கிய நிதி ஆதாரமாக உள்ள வாட் வரி விதிப்பை மத்திய அரசு
எடுத்துக்கொள்ள இருக்கிறது. இதனால் மாநில அரசுக்கு பெரும் வரி இழப்பு ஏற்படும். இதனால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதிக்கும். எனவே தான் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொழில் கல்விக்கான நுழைவு தேர்வு விஷயத்தில் மாநிலங்களில் நிலவும்
நிலைமையையோ, மாநில அரசுகளின் கருத்துக்களையோ மத்திய அரசு பொருட்படுத்துவதில்லை. கல்வித்துறையில் அடிக்கடி மத்திய அரசு தலையிடுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி
தாக்கப்படும் சம்பவத்தை நமது நாட்டுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருதவில்லை. இது, தமிழகத்தை மட்டும் பாதிக்கும் பிரச்னை என்பது போல மத்திய அரசு கருதுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் உயிர்கள் மத்திய அரசுக்கு மதிப்பற்றவையாக
தோன்றுகின்றன. அவர்களை பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை நடத்துவதில் எந்தவித பயனும் ஏற்படாது என்று நான் அஞ்சுகிறேன்.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில்
11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வளர்ச்சி விகிதம் சற்று குறைந்துள்ளது. 9 சதவீத வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் முதல் 4 ஆண்டுகளில் 8 சதவீத வளர்ச்சியைத்தான் எட்ட முடியும்.

விவசாயம் மற்றும் உற்பத்தி துறையில் முதல்
4 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அண்மையில் ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள எங்களது அரசு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 10 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறது. அதனை எட்டும் வகையில் எங்கள் நடவடிக்கைகள் அமையும். 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் நடவடிக்கைகள்
எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன. உணவு மற்றும் எரிபொருள் துறையில் விலைவாசி தொடர்ந்து  உயர்ந்து வருவதால் மக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக பதிலாக மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை அடிக்கடி உயர்த்தியதால் மேலும் விலைவாசி உயர்வதற்கான  சூழலை உருவாக்கி இருக்கிறது. 

எரிபொருளின் விலையை அடிக்கடி உயர்த்திக்கொண்டுபோனால் எப்படி பணவீக்கத்தை
குறைக்க முடியும். ஆனால், விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தங்கள் வரிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆலோசனை கூற தவறுவதில்லை.

மாநில அரசுகள்தான் மக்களுடன் நெருக்கமானவர்கள். எனவே வளர்ச்சி திட்டங்களில்
மாநில அரசுகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அப்படி செய்யாமல் மாநில அரசுகளை துணை அமைப்புகள் போல நடத்துகிறது. நிதர்சன உண்மைகளை மத்திய அரசு உணரவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் திட்ட செயலாக்கம் இல்லை.

ராஜீவ்காந்தி கிராம விடியூட்டி கரண் யோஜனா திட்டம்
, பிரதம மந்திரி கிராம சாதக் யோஜனா போன்ற திட்டங்களின் நிதி உதவி மாநில அரசுக்கு கிடைக்கவில்லை. தமிழக அரசை பொறுத்தவரை அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பை வழங்கியிருக்கிறது.

ராஷ்ட்ரிய ஸ்வஸ்தி பீமயோஜனா மற்றும் இந்திரா காந்தி தாய்மை பேறு
நலத்திட்டம் ஆகியவை சிறிய பகுதிகளில் நிறைவேற்றப்படுகிறது. மாநில அரசு திட்டங்களுடன் சேர்த்து இதை செயல்படுத்தினால் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும். மேலும் பல்வேறு அரசின் திட்டங்களின் நிதி அந்த திட்டங்களை நிறைவேற்றும் அமைப்புகளுக்கு நேரடியாக அந்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இது திட்டமிட்டே மாநில அரசுகளை புறக்கணிப்பதுடன் ஜனநாயக அதிகார பரவலுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.

மாநில அரசுகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்து மாநில பட்ஜெட் மூலம் அவற்றை செயல்படுத்துவதே சரியான முறையாக இருக்கும்.
 

தமிழகத்தின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழ்நாடு
2025 தொலைநோக்கு என்ற திட்டத்தை எனது அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பொது, தனியார்  பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இதற்கான தெளிவான கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

சூரிய எரிசக்தி துறையில் அதிக முதலீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
12வது ஐந்தாண்டு திட்டம் சூரிய சக்தி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காலம் வர வேண்டும்.'

நிதியமைச்சர் வாசித்த உரையில் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு கூறியிருந்தார்.

Saturday, October 22, 2011

தேர்தல்முடிவுகளே சாட்சி. புரட்சித்தலைவிஅறிக்கை.

 
உள்ளாட்சித் தேர்தலில் பெரும்வெற்றியைத் தந்த 
மக்களுக்கு நன்றிதெரிவித்து கழகப் பொதுச்செயலாளர்  
தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 
அறிக்கை வருமாறு:

அன்பார்ந்த எனதருமை வாக்காளப்பெருமக்களே!
நடந்து முடிந்த திருச்சிராப்பள்ளி மேற்குசட்டப் பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும்,
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் நீங்கள் அளித்த தீர்ப்புகளுக்குமுதலில் என்னுடைய இதயம் கனிந்தநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியைப் பற்றி நீங்கள் என்ன எடை போட்டிருக்கிறீர்கள் என்பதை உலகம் தெரிந்து கொள்ள இந்தத்தேர்தல் முடிவுகள் அமையும் என்று நான்
உறுதிபட நம்பினேன். என்னுடைய
நம்பிக்கை மெய்ப்பட்டிருக்கிறது.

உங்களுடைய மகத்தான தீர்ப்பு நான் எதிர்பார்த்ததைப் போலவே அமைந்திருக்கிறது.எனவே, அனைவருக்கும் மிகுந்த மன நெகிழ்ச்சியோடு, அன்புப் பெருக்கோடு மீண்டும் மீண்டும் நன்றி கூறி மகிழ்கிறேன்.

எண்ணற்ற இடர்ப்பாடுகள், பொருளாதார பற்றாக்குறைகள், நிர்வாக சீர்கேடுகள்,கடன் சுமைகள் என்று அனைத்து முனைகளிலும் தாக்குதல்களுக்கு உள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக ஆட்சிப் பொறுப்பைத் தான் உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னிடம் ஐந்து மாதங்களுக்குமுன்னர் அளித்தீர்கள். இந்தக் குறுகிய காலத்திலேயே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நடைமுறைப்படுத்தி உங்கள் அன்பை இந்த அரசு பெற்றிருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல்முடிவுகளே சாட்சி.

என்னுடைய உழைப்பு உங்களுக்காக தொடர்ந்து
கொண்டிருக்கும்.தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக,
வீடு வீடாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நல்ல ஆட்சி, நல்ல நிர்வாகம் வழியாக வளமான
தமிழகம் காண்போம் என்றும்,
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகத்தை ஆக்குவோம்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கூறியுள்ளார்கள்.