Thursday, June 30, 2011

விசாரணை கமிஷன் என்றவுடன் மு.க. பயம், நடுக்கம்.

டில்லியில் பிரதமரை சந்திக்கச் சென்ற போது, முதல்வர் தங்கும் அறை மாற்றப்பட்டது. புதிதாக சாலை போடப்பட்டது. இதற்கு செலவழிக்கப்பட்டது எவ்வளவு, செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு சட்டப்பேரவை உருவாக்க செய்த செலவு எவ்வளவு, பயணிகள் விமானத்தை பயன்படுத்தாமல், தனியார் விமானத்தில் முதல்வர் செல்வதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு, இது குறித்து விசாரணை உண்டா?என்றுகேள்வி வேறு.

1200 கோடி ரூபாய்க்கு விசாரணை என்றால், லட்சத்தில் உள்ள செலவிற்கு விசாரணை கமிஷன் கேட்கிறார். சம்பந்தமே இல்லாமல் உளறுவது இவரின் வாடிக்கையாகிவிட்டது. ஏன் இவர் இப்படி இருக்கிறார்? விசாரணை கமிஷன் என்றவுடன் பயம், நடுக்கம் வந்துவிட்டது போலும்..... அதனால் நிச்சயம் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது இவற்றின் பயத்திலிருந்து நிரூபணம் ஆகிறது. நிச்சயம் அந்த தண்ணீர் டாங்க் சட்டமன்றம் இருநூறு கோடி ரூபாய் தான் இருக்கும், மீதம் உள்ள 1000 கோடி ரூபாயை ஸ்வாகா செய்துள்ளார்கள், அதனால் கருணாநிதி பதட்டமாக உள்ளார். இது மட்டுமா, விசாரணை கமிஷன் அமைத்தால், இன்னும் தோண்ட தோண்ட ஊழல்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். சமசீர் கல்வி புத்தகத்திற்கு ஒரு விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்தால், அதன் உண்மையான செலவு 80 கோடி, 200 கோடி அல்ல என்று தெரியவரும். என்னமோ இவர் அறிக்கையால் தான் அம்மா காஸ் விலை குறைத்ததாக திமுகவினர் கூறினார்கள், அப்படி என்றால், மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் திமுக ஏன் மத்திய அரசை வலியுறுத்தி விலை ஏற்றதை திரும்ப பெறவில்லை?

முன்பு வெங்காயம் விலை அதிகம் என்று மு.க.விடம் கேட்டபோது, பெரியாரிடம் போய் கேள் என்று நக்கல் செய்தார், பெட்ரோல் விலை ஏறியதை கேட்டபோது போய் மன்மோகன் சிங்கிடம் கேள் என்று சொன்னவர் தான் இந்த மு.க. இவர் சொல்லிட்டாராம், அம்மா வரியை நீக்கிவிட்டாராம்? 

ஒரு சின்ன கதை, ஒரு எறும்பு யானையின் தலையில் உட்கார்ந்து அழுத்துமாம், அந்த யானை தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சம் முழ்குமாம், உடனே கரையில் இருக்கும் எறும்புகள், யானையின் தலையில் உள்ள எறும்பை பார்த்து, அப்படி தான், விடாதே, நல்லா அழுத்து, யானை தண்ணீரில் முழ்கி சாகட்டும் என்று கூச்சல் போடுமாம். அந்த எறும்பினால் தான் யானை மூழ்கியது என்று அந்த எறும்புகள் ஒன்றோடு ஒன்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவிதுகொள்ளுமாம், அது போல இருக்கிறது, நான் விட்ட அறிக்கையால் தான் வரியை குறைத்தார் என்று சொல்லுவது. கருணாநிதி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்த போது, ஏன் விற்பனை வரியை குறைக்கவில்லை?

இருபது லட்சம் செலவு, அது மக்கள் வரி பணம், சரி, விசாரணை தேவை, செம்மொழி மாநாட்டிற்கு 500 கோடி செலவழித்தாரே, அது நம்முடைய வரி பணம் இல்லையா? கருணாநிதியின் சொந்த பணமா?2G ஊழல் காரணமாக இது நாள் வரை கருணாநிதி, திமுக உறுபினர்கள், குடும்ப உறுப்பினர்கள் டெல்லி சென்றார்களே, அது யார் பணம்? அவர் சொந்த பணமா? அம்மா ஆட்சி அமைத்து ஒரே முறை தான் டெல்லி சென்றார், அதுவும் அரசாங்க ரீதியாக சென்றார், அதற்க்கு இந்த கூப்பாடு போடுகிறீர்கள்? சரி, மன்மோகன் சிங், சென்னை வந்தால், பயணிகள் விமானத்தில் தான் வரவேண்டும் என்று கூறுவீர்களா? இல்லை வெளிநாடு செல்லும் போது பயணிகள் விமானத்தில் தான் செல்லவேண்டும் என்று கூறுவீர்களா?.  

மன்மோகன் சிங், மற்றும் உயர் பதவியில் இருப்பவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்லும் போது தனி விமானத்தில் தான் செல்வார், அது போலவே. அம்மா ஒரு மாநில முதல்வர், அதும் வலிமையான முதல்வர், அவர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி விமானத்தில் செல்லவேண்டும். ஒவ்வொரு மாநில முதல்வர்கள் ஐந்து வருடத்தில் அரசாங்க ரீதியான பயணத்தில் இவ்வளவு பணம் செலவு செய்து கொள்ளலாம் என்று அளவு உள்ளது, அந்த பணத்தில் தான் அவர் செலவு செய்கிறார். தெரிந்தால் பேசுங்கள், சும்மா வரி பணம் வரி பணம் என்று பிதற்றாதீர்கள். எவ்வளவோ லட்சம் கோடிகள் கொள்ளையடித்தார், அது பரவாயில்லையாம், இருபது லட்சம் தான் இவருக்கு மக்களின் வரி பணமாக தெரியுதாம்....

ஒரு ஊழலை விசாரிக்க விசாரணை கமிசன் அமைத்ததற்கே இப்படின்னா இன்னும் நிறைய ஒன்றன் பின் ஒன்றாக வருமே ! தவறு நடந்திருப்பதால் தீர்ப்பு எப்படி வரும்னு முன் கூட்டியே அனுமானித்து அறிக்கை விட்டிருக்கிறார்.

Monday, June 20, 2011

தமிழீழம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு துணை நிற்போம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

சைதாப்பேட்டை
தேரடி திடலில் நேற்று இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது எந்த நாடும் கண்டு கொள்ளவில்லை.

சட்டமன்ற
தேர்தலின் போது இரட்டை இலை துளிர்த்தால் ஈழம் மலரும் என்று நான் பிரசாரம் செய்தேன்.பலர் என்னை பார்த்து ஏளனம் செய்தார்கள்.இன்று நாம் நினைத்தது போல, ஜெயலலிதா முதலமைச்சராகி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.

8
கோடி தமிழக மக்களின் பிரதிநிதியான முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை ஒரு அமைச்சரை வைத்து முன்மொழிய சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஈழத் தமிழர்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் கருதி சட்டமன்றத்தில் அவரே தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார்.துணிச்சல் மிக்க பெண்மணி அவர்.

இதற்காக
நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது.புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர்.அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும்.

சட்டமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்த போதும் ஜெயலலிதா வற்புறுத்தினார்.இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதற்காக அவர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம்.அவரது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.

 
இலங்கை தமிழர் பிரச்னையில் இன்று ஜெயலலிதா நாடகம் ஆடுவதாக கருணாநிதி கூறுகிறார்.இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் அவர் இது போன்ற ஒரு நாடகத்தை கூட அவர் நடத்திக் காட்டவில்லையே?
ஜெயலலிதாவை பொறுத்தவரை எந்த காரியத்தில் இறங்கினாலும் அதனை நிறைவேற்றாமல் விடமாட்டார்.தமிழ் ஈழத்தையும் அவர் பெற்றுத் தருவார்.இதற்காக இறுதிவரை நாங்கள் உங்களுக்கு உறு துணையாக இருப்போம்.


இவ்வாறு சீமான் பேசினார்.

Sunday, June 5, 2011

திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் என்ன

அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு  காரணம் என்ன
 

திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.

திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்:

1.
மின்வெட்டு

தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான்.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாகவே இருந்தது. தினசரி பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொழில் உற்பத்தி முடங்கிப் போனது. குறிப்பாக சிறு தொழில் செய்வோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். கொங்கு மண்டலத்திலோ தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும் சுத்தமாக நசிந்து போனது. பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்தனர்.

கச்சாப் பொருட்களின் விலையேற்றம் ஒருபக்கம், மின்வெட்டு மறுபக்கம் என பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர் அவர்கள்.

அதேபோல சாதாரண மின் நுகர்வோர்களும் மின்வெட்டால் கடும் பாதிப்பை சந்தித்தனர். தொடர் மின்வெட்டால், மக்கள் பட்ட அவதி சொல்லொணாதது.

அதை விட மக்களை அதிகம் கோபத்துக்குள்ளாக்கிய விஷயம், சென்னைக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரத்தை வழங்கிய அரசின் செயல்தான்.

2.
விலைவாசி உயர்வு

இதேபோல மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய, கோபத்திற்குள்ளாக்கிய விஷயம் விலைவாசி உயர்வுப் பிரச்சினை. குறிப்பாக வெங்காய விலை உயர்வும், காய்கறிகளின் விலையும், தக்காளி விலை உயர்வும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.

விலைவாசி உயர்வைத் தடுக்காமல், அந்த மாநிலத்தில் இல்லையா, இந்த மாநிலத்தில் இல்லையா என்று முதல்வர் கருணாநிதி பட்டியலைக் காட்டி விலைவாசி உயர்வு நியாயமானதுதான என்பது போலப் பேசியதும் மக்களை கோபத்திக்குள்ளாக்கி விட்டது.

3.
குடும்பத்தினரின் ஆதிக்கம்

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் இதுவரை இல்லாத அளவு, வரலாறு காணாத வகையில், இந்த ஆட்சியின்போது மிகப் பெரிய அளவில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த, மு.க.அழகரி மறுபக்கம் ஆதிக்கம் செலுத்த, கனிமொழியின் ஆதிக்கம் ஒரு பக்கம் என குடும்ப அங்கத்தினரின் ஆதிக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொடி கட்டிப் பறந்தது.

மதுரையில் ஒரு தூசி நகர்ந்தாலும் கூட அது அழகிரிக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற அளவுக்கு அங்கு அவரது ஆதிக்கமும், அதிகாரமும் கொடி கட்டிப் பறந்தது.

இப்படி கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் மக்கள் பட்ட அவதிகளும் நிறைய - நேரடியாகவும், மறைமுகமாகவும்.

4.
திரைத்துறையில் கருணாநிதி குடும்ப ஆதிக்கம்

அதேபோல திரைப்படத் துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இதுவரை இல்லாத அளவு மிக மிக அதிகமாகவே இருந்தது.

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விழுங்கி விட்டது என்றே கூறலாம். பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் வற்புறுத்தியும், மிரட்டியும் இவர்கள் தங்களது படங்களில் நடிக்க வைத்தார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. இதை வெளியில் கூற முடியாமல் அந்த நடிகர்களெல்லாம் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.

அதேபோல அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தமிழரசுவின் தயாரிப்பு நிறுவனம், அவரது மகன் அருள் நிதி நடிகராக்கப்பட்டது, கருணாநிதியின் இன்னொரு பேரன் குணாநிதி திரைத்துறையில் தயாரிப்பில் இறங்கியது என எங்கு பார்த்தாலும் கருணாநிதி குடும்பத்தாரின் முகங்களாகவே தெரிந்தது. இவர்களைத் தாண்டி யாரும் படம் எடுக்க முடியாது, நடிக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது.

கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தை மனதில் வைத்தே நடிகர் அஜீத், முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே தங்களை மிரட்டுவதாக குமுறியது நினைவிருக்கலாம்.

அதேபோல கருணாநிதிக்காக தொடர்ந்து விழாக்களை எடுக்க திரைத்துறையினர் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்களை வலுக்கட்டாயமாக கலந்து கொள்ள நிர்ப்பந்தித்தனர்.

ரஜினிக்கு அடுத்து பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள நடிகர் விஜய்க்கு, திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியும் அனைவரும் அறிந்ததே. அவரது படங்களுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்தது, மிரட்டியது, வழக்குகளைக் காட்டி பணிய வைக்க முயன்றது என நிறைய விஷயங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்தது.

இப்படி கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தால் திரைத்துறையினரும் புழுக்கத்துடன்தான் இருந்தனர். இவற்றை எதிர்க்கட்சிகள் மக்களிடம் எடுத்துக் கூறி செய்த பிரசாரம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது என்பது முடிவுகளில் தெரிகிறது.

5.
ஈழத் தமிழர் பிரச்சினை

ஈழத் தமிழர் பிரச்சினையும் திமுகவின் அஸ்தமனத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர்களை சிங்களக் காடையர்கள் கொத்திக் குதறிப் போட்டபோதெல்லாம் அவர்களுக்காக திமுக குரல் கொடுக்கவில்லை என்பது, கண்மூடித்தனமாக காங்கிரஸை ஆதரித்தது, எதிர்த்துக் குரல் கொடுக்க தயங்கியது என திமுக மீது சரமாரியான புகார்கள் உள்ளன.

உலகத் தமிழர்கள் எல்லாம், கலைஞர் இப்படி அமைதி காத்து விட்டாரே, அவர் நினைத்திருந்தால் ஒட்டுமொத்த உயிர்ப்பலியையும் தடுத்திருக்கலாமே, தமிழர்களின் தலைவர் என்று அவரை அன்போடு அழைத்ததெல்லாம் வீணாகி விட்டதே என்று வெம்பிப் புலம்பி வேதனையில் மூழ்கும் அளவுக்கு அமைதி காத்தார் கருணாநிதி.

ஈழத்தில் கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய உயிர்ப் பலியின்போதும் கூட திமுக சற்றும் கலங்காமல், காங்கிரஸுக்கு சாதமாகவும், சோனியாவின் மனம் நோகக் கூடாது என்ற நோக்கிலும், பேசி வந்ததும், உண்ணாவிரதம் என்ற பெயரில் அவர் நடத்திய மிகக் குறுகிய போராட்டமும் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயரையே ஏற்படுத்தியது.

சோனியா காந்தி மனம் நோகக் கூடாது, காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளக் கூடாது, கனிமொழிக்கும் தனது குடும்பத்துக்கும் ஆபத்து வந்து விடக் கூடாது என்ற நோக்கில் மட்டுமே கருணாநிதி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு சரிதான் என்று தமிழக மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் காட்டி விட்டனர்.

6. 2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

திமுக அரசின் மீதான பல முக்கியக் குற்றச்சாட்டுக்களில் ஒன்று ஸ்பெக்ட்ரம் ஊழல். அதாவது திமுகவின் ஊழலாக மட்டும் இதை மக்கள் பார்க்கவில்லை. மாறாக கருணாநிதி குடும்பத்தினர் மொத்தமாக அரங்கேற்றிய மிகப் பெரிய ஊழலாக இது மக்கள் மனதில் பதிந்து போய் விட்டது.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1,76,000 கோடி அளவிலான இந்த ஊழல் மக்கள் மனதில் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்த ஊழலில் ராசாவை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தனது மனைவி தயாளு அம்மாள், கனிமொழியைக் காக்க கருணாநிதி போராடியதும் திமுகவினருக்கே அதிர்ச்சியாக அமைந்தது என்பதே உண்மை.