Saturday, October 22, 2011

தேர்தல்முடிவுகளே சாட்சி. புரட்சித்தலைவிஅறிக்கை.

 
உள்ளாட்சித் தேர்தலில் பெரும்வெற்றியைத் தந்த 
மக்களுக்கு நன்றிதெரிவித்து கழகப் பொதுச்செயலாளர்  
தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 
அறிக்கை வருமாறு:

அன்பார்ந்த எனதருமை வாக்காளப்பெருமக்களே!
நடந்து முடிந்த திருச்சிராப்பள்ளி மேற்குசட்டப் பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும்,
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் நீங்கள் அளித்த தீர்ப்புகளுக்குமுதலில் என்னுடைய இதயம் கனிந்தநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியைப் பற்றி நீங்கள் என்ன எடை போட்டிருக்கிறீர்கள் என்பதை உலகம் தெரிந்து கொள்ள இந்தத்தேர்தல் முடிவுகள் அமையும் என்று நான்
உறுதிபட நம்பினேன். என்னுடைய
நம்பிக்கை மெய்ப்பட்டிருக்கிறது.

உங்களுடைய மகத்தான தீர்ப்பு நான் எதிர்பார்த்ததைப் போலவே அமைந்திருக்கிறது.எனவே, அனைவருக்கும் மிகுந்த மன நெகிழ்ச்சியோடு, அன்புப் பெருக்கோடு மீண்டும் மீண்டும் நன்றி கூறி மகிழ்கிறேன்.

எண்ணற்ற இடர்ப்பாடுகள், பொருளாதார பற்றாக்குறைகள், நிர்வாக சீர்கேடுகள்,கடன் சுமைகள் என்று அனைத்து முனைகளிலும் தாக்குதல்களுக்கு உள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக ஆட்சிப் பொறுப்பைத் தான் உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னிடம் ஐந்து மாதங்களுக்குமுன்னர் அளித்தீர்கள். இந்தக் குறுகிய காலத்திலேயே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நடைமுறைப்படுத்தி உங்கள் அன்பை இந்த அரசு பெற்றிருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல்முடிவுகளே சாட்சி.

என்னுடைய உழைப்பு உங்களுக்காக தொடர்ந்து
கொண்டிருக்கும்.தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக,
வீடு வீடாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நல்ல ஆட்சி, நல்ல நிர்வாகம் வழியாக வளமான
தமிழகம் காண்போம் என்றும்,
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகத்தை ஆக்குவோம்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment