Sunday, September 25, 2011

வாழ்ந்து காட்டிய வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 'பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவை' என்ற அமைப்பு ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர் ., விழாவை நடத்தி வருகிறது. மேலும் 2009ம் ஆண்டு முதல் அரசின் அனுமதி பெற்று எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால் தலையும் வெளியிடப்படுகிறது. 

இந்த ஆண்டு எம்.ஜி.ஆர்., விழா 2011, செயிண்ட் டெனிஸ் நகரில் செப்டம்பர் 17ம் தேதியன்று பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவை தலைவர் முருகு பத்மநாபன் தலைமை தாங்க, பிரான்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் பா.தசரதன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் அலன் ஆனந்தன் முன்னிலை வகிக்க, எம்.ஜி.ஆர்., பேரவை செயலாளர் ஆனந்த ராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயிண்ட் டெனிஸ் துணை மேயர் ஹென்னி சாரா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, 

சென்னையிலிருந்து நடிகர் மயில்சாமி மற்றும் 'இதயக்கனி' ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்தனர்.

கவிசித்தர் கண கபிலனாரின் கவியுரை, கோதண்டம் சாரா மற்றும் சாரநாயகி ஆகியோரின் பரதநாட்டியம், பிருந்தா மற்றும் மானுஷாவின் வீணை இசையில் எம்.ஜி.ஆர்., பாடல்கள், சரண் மற்றும் சுகன்யாவின் கீபோர்டு இசை, எம்.ஜி.ஆர்., பாடல்களுக்கு நடனமாடிய பாலாஜி மற்றும் திவ்ய பாரதியின் நடனம், எம்.ஜி.ஆர்., பாடல்கள் பாடிய பார்வையாளர்கள் சிலர், 

எம்.ஜி.ஆர்., பட பாடல்களில் காதல் பாடலே தன்னைக் கவர்ந்தது என்று பிரபல இலக்கிய சொழ்பொழிவாளர் வினோதினி சண்முகநாதனின் உரை, தாயை போற்றும் பாடல்களே தன்னை கவர்ந்தது என்று பவானி ஜெயபாலின் உரை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இந்த விழாவினை ‌ஜெகதீஸ்வரி செல்வமணி, பொன்னரசுடன் தொகுத்து வழங்கி பாடலொன்று பாடினார். 

அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால் தலையை 'இதயக்கனி' எஸ்.விஜயன் வெளியிட, நடிகர் மயில்சாமி பெற்றுக் கொண்டு இருவரும் சிறப்புரையாற்றினார். விழாவில் இதயக்கனி விஜயனின் எம்.ஜி.ஆர்., புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் எம்.ஜி.ஆர்., பயன்படுத்திய சால்வை, கறுப்புக் கண்ணாடி ஆகியவை வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் முகமத் முஜாவித் நன்றியுரை வழங்கினார். 

விழாவிற்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவை சார்பில் அதன் தலைவர் முருகு பத்மநாபனுடன் இணைந்து தட்சிணாமூர்த்தி, அன்பழகன், கோபால கிருஷ்ணன், ராமமூர்த்தி, மதிவாணன், ரமேஷ், தர்மதேவன், சத்யமூர்த்தி, குமாரராஜா, பாலகந்தன், அருண்குமார், ராஜாராம், பாண்டியராஜன், கீதா, கலைவாணி, பூங்குழலி, சத்யவாணி, விஜயா, பெரியநாயகி ஆகியோர் கவனித்தனர்.
நன்றி:தினமலர்

No comments:

Post a Comment