Monday, December 19, 2011

ஒரு தவறு செய்தால் அது சசி&கோ என்றாலும் விடமாட்டேன்.

அம்மா அவர்கள் மிக மிகச் சரியான முடிவு எடுத்து இருக்கின்றார்கள். தாமதம் இல்லாமல் எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் அம்மாவுக்கு நிகர் அம்மாதான். இதன் மூலம் அ.தி. மு. கவை பிடித்து இருந்த சனி விலகியது என்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் இனி அ.தி.மு.க மிக்கப் பலம் வாய்ந்த தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்த தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். கட்சியில் எத்தகைய உயர் மட்டத்தில் இருந்தாலும், தனக்கோ கட்சிக்கோ அவர்களால் இடர் வரும் என்று தெரிந்தால் கட்சியில் இருந்தே விலக்க தயங்க மாட்டார்.நல்ல துணிச்சலான முடிவு ஆனால் மிகவும் தாமதமாக எடுத்த முடிவு

இவர்கள்தான்(சசி&கோ) கட்சிக்கு கெட்ட பெயர்கள் வர காரணமாக இருந்தவர்கள். இப்போதுதான் ADMK உண்மையான MGR அவர்களின் உண்மையான கட்சி, அவரது மறைவு தினத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல செய்தி என்று சொல்லலாம், துணிந்து துணிவோடு மக்களுக்கு நல்லது யார் செய்தாலும், அது கடவுளுக்கு செய்யும் காரியமாகும் ,

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.என்ற புரட்சித்தலைவர் பாடல் வரிக்கு சரியான சாட்சி இந்த சசி&கோ நீக்கம்.

No comments:

Post a Comment