Sunday, August 7, 2011

இலங்கைத் தமிழருக்கு தி.மு.க. ஆட்சிதான் அதிகம் செலவு செய்தது


"இலங்கைத் தமிழருக்கு தி.மு.க. ஆட்சிதான் அதிகம்
செலவு செய்தது" - கருணாநிதி


ஆமா ஆமா..! இந்த தாத்தா இலங்கை தமிழருக்காக தாராளமாக
செலவு செய்ததை உலகத் தமிழினத்தால் மறக்கத்தான் முடியுமா?
 

அதிலும், கருணாநிதி பங்கேற்றிருக்கும் கருணை துளியும் இல்லா
மத்திய அரசு கொத்துக்கொத்தாய் குண்டுகளை ஈழத்தமிழர்கள்
மீது இரக்கமின்றி வீசுவதற்கு ஏதுவாக பலாளி விமான தளத்தை
பலகோடி செலவு செய்து பழுது நீக்கி தந்ததற்கு செய்த செலவு
கொஞ்சமா?


ரேடார்களும், ஆயுதங்களும், கோடானக்கோடி பணமும்
கொடுத்து இறுதி யுத்தம் என்னும் பெயரால் இன அழிப்புக்கு
சோனியாவின் அரசு செய்த செலவு கொஞ்சமா, நஞ்சமா?
 


இவையாவினும்விட முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் உச்சம்
தொட்டபோது, கருணாநிதி முதுகு வலி என நாடகம் ஆடி நடித்த
மருத்துவமனை நாடகத்திற்கு செலவிட்ட தொகைதான் கொஞ்சமா?
 


எல்லாம் முடிந்ததென தெரிந்தும் இவரும் "சீட்டிங்
சினாதானா"வும் கூட்டுசேர்ந்து கொண்டு அண்ணாசமாதியில்
நடத்திய உண்ணாவிரத நகைச்சுவை நாடகத்திற்கு ஆன
செலவுதான் கொஞ்சமா?


இப்படி இனத்துரோகி கருணாநிதிஇலங்கை தமிழருக்கு செலவழித்த தொகையை கூட்டிப்பார்த்தால்சூடு, சொரணை கொண்ட ஒவ்வொரு தமிழனுக்கும் உமிழ்நீரைகாரி அவரது உச்சந்தலையில் துப்பத்தான் தோன்றும்...

நன்றி

                                                                                                                    







No comments:

Post a Comment